.

புதன், அக்டோபர் 21, 2015

காந்தியவாதி டேவிட் ஐயாவுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி என்ன?



David Aiya - Gandhiyan Activist


ழ விடுதலைப் போராட்டத்தைக் குறை கூறும் எல்லோரும் கேட்கும் முதன்மையான கேள்விகளுள் ஒன்று, “அவர்கள் என்ன காந்தி போல அறவழியிலா போராடினார்கள்? ஆயுதம் ஏந்தியவர்கள்தானே!” என்பது.

காலமெல்லாம் எழுப்பப்பட்டு வந்த, வருகிற இந்தக் கேள்விக்கான வாழும் பதிலாக நடமாடிக் கொண்டிருந்த காந்தியம் டேவிட் ஐயா கடந்த 11.10.2015, ஞாயிறு அன்று நம் தமிழுலகை விட்டு மறைந்தார்.

ஈழத் தமிழ் மக்களால் ‘டேவிட் ஐயா’ என அன்பொழுக அழைக்கப்படும் சாலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள் எழுபதுகளில், அன்றைய ஈழத் தமிழ் மண்ணிலே காந்திய வழியில் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர். “தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தகுதியானவர்களாக மாறுவதுதான் ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வின் முதல் படி” என்று நம்பியவர் விடுதலை, தனி ஈழம் போன்ற சர்ச்சைக்குரிய எந்த நோக்கமும் இன்றி வெறுமே கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செயல்பட்டார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் நண்பர்கள் மருத்துவர் ராஜசுந்தரம், அவர்தம் மனைவியார் முதலான சிலருடன் சேர்ந்து வேளாண் கல்விப் பண்ணை அமைத்தார்; நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கினார்; கல்விக் குடில்கள் திறந்தார்; காந்தியையும் காந்தியத்தையும் முதன்மையாகக் கொண்டு பாடத்திட்டம் வகுத்தார்; பெண்களுக்கும் சிறாருக்கும் அந்த காந்தியக் கல்வியைப் புகட்டினார்; இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பும் படிப்பும் அளித்தார்; குழந்தைகளுக்குப் பாலும், பால் மாவும் இலவசமாக வழங்கினார்; ஒவ்வோர் ஊரிலும் ஒரு பெண்மணியைத் தேர்ந்தெடுத்துக் கல்வி கற்பித்து அவர்கள் மூலம் அந்தந்த ஊர்களில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதன் மூலம் எல்லா ஊர்களிலும் கல்வித்தரத்தை உயர்த்தத் தொலைநோக்குத் திட்டம் தீட்டினார்.

ஆனால், இப்படி முழுவதும் மக்கள் சேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கிய

திங்கள், அக்டோபர் 12, 2015

ஏனெனில் நாங்கள் தமிழர்கள்!



US - Srilanka - UN
ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக் குறித்துப் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளோடு இணைந்து இலங்கையே விசாரித்தால் போதும்! - ஐ.நா-வில் தீர்மானம்


உலகின் பிற நாடுகளில்

சொந்த நாட்டு மக்கள் மீது

அந்த நாடே இராணுவம் ஏவினால்

அதற்குப் பெயர் ‘இனப்படுகொலை’!

ஆனால்,

அதுவே எங்களுக்கு நடந்தால்

திங்கள், அக்டோபர் 05, 2015

புறப்படுவோம் புதுக்கோட்டை நோக்கி! வாரீர்! வாரீர்!!


Welcome

வானறிந்ததனைத்தும் தானறிந்த தமிழின் தங்கப் பிள்ளைகளே! அனைவருக்கும் நேச வணக்கம்!

ஓலையிலும் பாறையிலும் வடித்தும், யாழிலும் பறையிலும் இசைத்தும், மேடையிலும் திரையிலும் நடித்தும் தீராத நம் தமிழமுதை இந்த முத்தமிழையும் தாண்டி, இற்றை நாளுக்கேற்பக் கணினியிலும் கைக்கருவிகளிலும் வளர்க்கும் நான்காம் தமிழ்க் காலக்கட்டம் இது. அந்தப் புதிய தாய்த்தமிழைப் புதியதாய் நாளும் மெருகூட்டும் வலைப்பதிவுலகம் இதோ நான்காம் முறையாக ‘வலைப்பதிவர் திருவிழா’க் காண்கிறது!

இந்த முறை தமிழ்நாடு அரசின் ஒரு பிரிவான ‘தமிழ் இணையக் கல்விக்கழக’மும் வலைப்பதிவர்களோடு கைகோத்திருப்பதை வலையுலகிற்குத் தமிழ்நாடு அரசு அளித்த ஏற்பிசைவாகவே (recognition) கருதலாம்.

அதுவும் இந்த முறை ஐம்பெரும் வகைகளில் (genres) படைப்பிலக்கியப் போட்டிகள், அவற்றுள் பரிசு பெறக்கூடியவற்றை ஊகிக்கும் வாசகர் போட்டிகள் என சங்கர் படப் பாணியில் பரிசு மழை கொட்டும் பிரம்மாண்டப் பெருவிழாவாய் அரங்கேற இருக்கிறது பதிவர் திருவிழா!

இது போக, சிறந்த பதிவர்களுக்கான விருதுகள், புதிய பதிவர்களுக்கான அறிமுகங்கள், பா - ஓவியக் கண்காட்சிகள், நூல் வெளியீடுகள் என நிகழ்வுகளும் நிறைய!

தவிர, விழாவில் இந்த முறை கலந்து கொள்ளப் போகிறவர்கள் வலைப்பதிவர்கள் மட்டுமில்லை, தமிழ் இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர் முனைவர்.மா.தமிழ்ப்பரிதி அவர்கள், புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச் சங்க நிறுவனர் முனைவர்.நா.அருள் முருகன் அவர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் சொ.சுப்பையா அவர்கள், தமிழின் பெருமைக்குரிய இணைய அறிவுக் களஞ்சியமாம் தமிழ் விக்கிப்பீடியாவின் இந்திய விக்கி மீடியாத் திட்ட இயக்குநரும் முன்னோடி வலைப்பதிவரும் நம் நண்பருமான திருமிகு.அ.இரவிசங்கர் அவர்கள், சமகால எழுத்தாளர்களுள் தலைசிறந்த ஒருவராய்த் திகழும், எஸ்.ரா என நாமனைவரும் அன்பொழுக அழைக்கும் முனைவர்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் என முதன்மையான தமிழ்ப் பெருமக்களும் இன்னும் வெளியுலகத் தமிழ் சான்றோர்களுக்கே சவால் விடக்கூடிய வலையுலகப் பேரறிஞர்களும் எனத் தகைசால் தமிழர்கள் ஏராளமானோர் திரண்டு கலந்து கொள்ளும் இவ்வின்விழாவில் நீங்களும் கலந்து கொள்ளுமாறு அன்பர்கள், நண்பர்கள், சக பதிவர்கள், அகச் சிவப்புத் தமிழ் நேயர்கள் என அனைவரையும் அழைப்பிதழ் வைத்து இரு கரம் கூப்பி அகமும் முகமும் மலர அழைக்கின்றேன்!


Bloggers Meet - 2015 Invitation (front)
Bloggers Meet - 2015 Invitation (back)

நாள்: ௧௧-௧௦-௨௦௧௫ (11.10.2015); ஞாயிற்றுக்கிழமை.

இடம்: ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம்
       பீ வெல் மருத்துவமனை எதிரில், 

ஆலங்குடி சாலை, 

புதுக்கோட்டை.

 

புதுக்கோட்டை வாருங்கள்!

புது மலர்ச்சி காணுங்கள்! 


என்றும் நட்புடன் உங்கள்:    
Sign

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி இலால்பேட்டை சிராச், வலைப்பதிவர் விழாக் குழுவினர்.

குறிப்பு: வலைப்பதிவர் அல்லாதோரும் பரிசு பெறும் வகையில் வலைப்பதிவர் விழாக் குழுவினர் நடத்தும் புதுமையான பொதுப் போட்டி! முதல் பரிசு உரூபாய் பத்து ஆயிரம்!! தட்டிச் செல்ல அழுத்துங்கள் இங்கே!
 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்