.

சனி, செப்டம்பர் 19, 2015

இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி!



Tamils take over the internet!

கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி - வகை (1)
 
ணினியில் தமிழ் வளர்ப்பது என்றாலே நம் நினைவுக்கு வருபவை தமிழில் தட்டெழுத்துக் கருவிகள் வடிவமைத்தல், சமூக வலைத்தளங்களின் சேவைகளைத் தமிழில் வரச் செய்தல், தமிழிலேயே கணினிக்கான நிரல் (programming) எழுதுதல் போன்றவைதாம்.

ஆனால், மூன்று பதிற்றாண்டுகளாகத்1 (decades) தமிழ்த் தன்னார்வலர்கள் பலரும் மேற்கொண்டு வரும் அயரா உழைப்பின் விளைவாக, மேற்படி நோக்கங்களில் நாம் ஓரளவு தன்னிறைவு எட்டிவிட்ட நிலையில், தமிழினம் தற்பொழுது தன் பார்வையைச் செலுத்த வேண்டிய இடம் கணினியில் தமிழர்களுக்கான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குதல்.

கணித்தமிழ் முன்னோடிகளான சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி, மா.ஆண்டோ பீட்டர் போன்றோர் முதல் இன்றைய வலைப்பதிவர்கள் வரை அனைவருமே தன்னார்வமாக, எந்த விதப் பொருளாதார நோக்கமும் இன்றியே இவை அனைத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இப்படி மக்களின் ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு ஒரு துறை எத்தனை காலத்துக்கு நீடிக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆங்கிலம், பிரெஞ்சு என மற்ற மொழிகள் கணினித்துறையிலும், இணையத்துறையிலும் அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்டு, இப்படியெல்லாம் நம் மொழியும் மிளிர வேண்டும் எனும் அவாவினால் இன்று நாம் எவ்விதப் பலனும் எதிர்பாராமல் கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடலாம். ஆனால், அப்படி மற்ற மொழிகளுக்கு இணையாக எல்லா வகைகளிலும் தமிழும் கணித்துறையில் வளர்ந்த பிறகு, தொடர்ந்து கணினிகளிலும் இணையத்திலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டுமானால் அதற்கெனப் பொருளாதார அடிப்படை ஒன்று இருத்தல் இன்றியமையாதது.

எழுத்தாளர்கள், இதழாளர்கள், வலைப்பதிவர்கள் என எழுத்துத்துறை சார்ந்த பயனர்களுக்கு மட்டுமேயானதாகக் கணித்தமிழ்ப் பயன்பாடு சுருங்கி விடாமல், தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாகப் பெருவளர்ச்சி பெற வேண்டுமானால் இதழ்கள், காட்சி ஊடகங்கள் ஆகியவற்றைப் போல் இணையமும் முழுமையான ஓர் ஊடகமாக உருவெடுத்தாக வேண்டும்! சுருக்கமாகச் சொன்னால், கணித்தமிழின் எதிர்காலம் இணையத்தமிழின் வளர்ச்சியைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. எனவே, இத்தனை ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கணித்தமிழ் தொடர்ந்து வருங்காலத் தலைமுறைகளாலும் பயன்படுத்தப்பட வேண்டுமானால் ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழிலும் இணையத்தை நாம் முழுமையான ஊடகமாகக் கட்டியெழுப்ப வேண்டும்! இயல், இசை, நாடகம் என மற்ற தமிழ்த் துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஓரளவாவது அவற்றின் மூலம் வருமானம் கிடைப்பது போல் நான்காம் தமிழ் எனப் போற்றப்படும் கணித்தமிழ்த்துறையிலும் வருவாய் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்! எதையுமே பொருளியல் (materialistic) கண்ணோட்டத்துடனே அணுகப் பழகி விட்ட இன்றைய உலகில் இதன் முதன்மைத்தனம் (importance) எத்தகையது என்பது குறித்து மேலும் விளக்கத் தேவையில்லை.

இணையத்தமிழ் முழுமையான ஊடகமாக வளர்ச்சியுற வேண்டுமானால், முதலில் அதற்கான வணிகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஊடக வணிகத்தின் வருமான வாயிலே விளம்பரங்கள்தாம். ஆனால், இணையத்தில் தமிழுக்கான விளம்பர வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்நிலையை மாற்ற உடனடித் தீர்வு, நிலையான தீர்வு என இரண்டு தீர்வுகளைத் தமிழ்கூறும் நல்லுலகின் மேலான பார்வைக்கு இங்கே முன்வைக்கிறேன்!

உடனடித் தீர்வு!

பெரிதாக ஒன்றுமில்லை; கூகுள் ஆட்சென்சு பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு அந்நிறுவனத்திடம் விண்ணப்பிப்பதுதான் இதற்கான உடனடித் தீர்வாக நான் முன்மொழிய விரும்புவது.

இப்படிச் சொன்னதும் சிலர் முகம் சுளிக்கலாம். ‘மற்ற மொழிகளையெல்லாம் கூகுள் தானாக முன்வந்து ஆட்சென்சு பட்டியலில் சேர்த்திருக்கும்பொழுது, தமிழர்களாகிய நாம் மட்டும் அதைக் கேட்டுப் பெறுவது நன்றாக இருக்குமா?’ என்று அவர்கள் நினைக்கலாம். அதுவும் தமிழரான சுந்தர் பிச்சை அவர்கள் இப்பொழுது கூகுளின் தலைமைச் செயலாளராக (CEO) வீற்றிருக்கும் நேரத்தில் இப்படி நாம் இதை விண்ணப்பித்துப் பெற்றால், தமிழர் ஒருவர் அப்பதவிக்கு வந்ததும் அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழர்கள் வருமானம் பார்க்கக் கிளம்பி விட்டார்கள் என்று மற்ற மொழியினர் நினைப்பார்கள் என்றும் சிலர் கருதலாம்.

நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்! தமிழுக்கு கூகுள் ஆட்சென்சு பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான தகுதி இல்லாவிட்டால், நாம் இப்படிக் கேட்டுப் பெறுவது இழிவானது. ஆனால், எல்லாத் தகுதிகளும் இருந்தும், மாநில மொழியாக இருக்கிற ஒரே காரணத்தால் நம் மொழிக்குரிய இடம் மறுக்கப்படுமானால் அதைக் கேட்டுப் பெறுவதில் என்ன தவறு?

அண்மையில், இந்தி கூகுள் ஆட்சென்சு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே! இந்தி என்ன, தமிழை விட இணையத்தில் முந்தி நிற்கிறதா?

உலகத்திலேயே ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான இணையத்தளங்களைக் கொண்டிருக்கும் மொழி தமிழ்!2 இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக இணையத்தில் அடியெடுத்து வைத்த மொழியும் தமிழே!3 அப்படிப்பட்ட தமிழை விட்டுவிட்டு கூகுள் இந்திக்கு ஆட்சென்சு பட்டியலில் இடம் கொடுக்க ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி’ என்கிற தவறான பரப்புரையைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

ஒருவேளை, ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான மக்கள் பயன்படுத்தும் மொழி இந்திதான் என வைத்துக் கொண்டாலும், அஃது இணையத்துக்கு வெளியே உள்ள நிலை. இணைய உலகைப் பொறுத்த வரை அந்தக் கூற்று தமிழுக்குதான் பொருந்தும்.

ஆக, எப்படிப் பார்த்தாலும், தகுதியுள்ள தமிழைப் புறக்கணித்து, ஏதோ சில தவறான காரணங்களின் அடிப்படையில் இந்திக்கு கூகுள் முதன்மை கொடுக்கத் தொடங்கியிருப்பது தெளிவாகத் தெரியும் நிலையில், நமக்குரிய இடத்தை நாம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை தோழர்களே!

வடநாட்டு அரசியலாளர்கள் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்திய அரசியல் சட்டத்துக்கே முரணாக, மாநில மொழி4 ஒன்றை இந்நாட்டின் தேசிய மொழியாக முன்னிலைப்படுத்துவதுதான் கூகுள் மட்டுமன்றி எல்லா இணையச் சேவை நிறுவனங்களிலும் அண்மைக்காலமாக இந்தி முதன்மை பெற்று வரக் காரணம். அப்படி முறைகேடான வழியில் அவர்கள் தம் மொழியை வளர்த்துச் செல்லும் நிலையில், தகுதியிருந்தும் நாம் வாளாவிருந்தால் இளித்தவாயர்களாகத்தான் வரலாற்றில் இடம் பெறுவோம்.

எனவே, உலகெங்குமிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் திரண்டு வந்திருக்கும் இந்தப் ‘புதுகை வலைப்பதிவர் திருவிழா’விலேயே ‘தமிழ் வலைப்பதிவர் சங்கம்’ ஆட்சென்சு பட்டியலில் தமிழைச் சேர்க்கும்படி கூகுள் நிறுவனத்தைக் கோரி, உரிய காரணங்களை எடுத்துக்காட்டித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! அதை முறைப்படி கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கவும் வேண்டும்!

தமிழ் வலைப்பதிவர்களில் மிகப் பெரும்பாலோர் கூகுளுடைய ‘பிளாகர்’ சேவையைத்தான் பயன்படுத்துகிறார்கள்5. கூகுள் நிறுவனத்தின் மற்ற சேவைகளைப் பயன்படுத்தும் தமிழர்களிடையில் சங்கம், மாநாடு போன்றவை இல்லாத நிலையில், கூகுளின் தமிழ்ப் பயனர்களில் பெரும்பாலானோர் ஒன்று கூடும் நிகழ்வாகத் திகழ்வது வலைப்பதிவர் திருவிழாக்கள்தாம். ஆக, புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாதான் இதற்கான பொருத்தமான இடம் என்பதில் ஐயமில்லை!

நிலையான தீர்வு!

கூகுள் ஆட்சென்சு போலவே தமிழுக்கென விளம்பர நிறுவனம் ஒன்றை உருவாக்குவதே இதற்கான நிலையான தீர்வாக இருக்கும்.

இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பரப்பளவுடைய தமிழ்நாட்டிடம், எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட உலகளாவிய தமிழினத்திடம் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. கடைகள், அங்காடிகள், வணிக வளாகங்கள் எண்ணற்ற அளவில் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இணையத்தில் விளம்பரப்படுத்த நமக்கென இணைய விளம்பரச் சேவை நிறுவனம் ஒன்று கட்டாயம் தேவை! ஆனால், இந்திய இணைய விளம்பர நிறுவனங்கள் எல்லாமே மகாராட்டிர, ஆந்திர, கருநாடக மாநிலத்தவருடையவையாகவே இருக்கின்றன. தமிழர்கள் இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

ஆங்கிலத்துக்கு அடுத்துத் தமிழில்தான் மிகுதியான இணையத்தளங்கள் இருக்கின்றன எனில், தமிழ் இணையத்தளங்களுக்கென விளம்பர நிறுவனம் தொடங்குவது எவ்வளவு பெரிய வருவாய் வாய்ப்பு என்பதைத் தமிழ் இளைஞர்களும், தமிழ்நாட்டு நிறுவனங்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!

கணித்தமிழ் முயற்சிகளுக்குப் பல்வேறு வகைகளிலும் பேராதரவு அளித்து வரும் தமிழ்நாடு அரசு இந்த வகைத் தொழில் முனைவுகளையும் முன்னெடுக்க ஊக்குவித்தல் வேண்டும்! இப்படியொரு கோரிக்கையைத் தமிழ்நாடு அரசின் ஒரு பிரிவான ‘தமிழ் இணையக் கல்விக்கழக’மும் இணைந்து நடாத்தும் ஒரு போட்டியில் தெரிவிப்பது சிறந்த பலனை அளிக்கும் என நம்புகிறேன்!

ஆங்கிலத்துக்கு நிகராகத் தமிழிலும் முழுமையான இணைய ஊடகத்தை உருவாக்குவோம்!
கணித்தமிழ் முயற்சிகளை நிலையாக்குவோம்!
தமிழை என்றும் அழியா மொழியாக்குவோம்!


சான்றுகள்:

2. அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் திசம்பர் 2004-இல் சிங்கப்பூரில் நடைபெற்ற இணையத்தமிழ் மாநாட்டில் அளித்த 'நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி' எனும் கட்டுரை.

3. தமிழின் சிறப்புகள் – தினத்தந்தி.

4. இந்தியாவின் அலுவல் மொழிகள் – தமிழ் விக்கிப்பீடியா.

5. தமிழ்ப்புள்ளி வலைப்பூக்கள் திரட்டி – நீச்சல்காரன். 

படம்: நன்றி கம்ப்யூட்டர் பிரம் வில்லேஜ்.

க்கட்டுரை என் சொந்தப் படைப்பே எனவும், இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015க்காகவே எழுதப்பட்டது” எனவும் உறுதிமொழி அளிக்கிறேன். மேலும், இது “இதற்கு முன் வெளியான படைப்பன்று, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதிமொழிகிறேன்.

❀ ❀ ❀ ❀ ❀

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

திங்கள், செப்டம்பர் 14, 2015

இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் சில பதில்களும்


Godfathers of Reservation in India

குஜராத்தில் படேல் இனத்தினர் நடத்திய கலவரம் மீண்டும் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ள இவ்வேளையில்… என நான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினால் அது பொய்யாகி விடும்!

இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் எப்பொழுதுமே இங்கு நடந்தபடிதான் இருக்கின்றன. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுபவர்களும் சரி, அந்தத் திட்டத்தினால் பலனடைபவர்களும் சரி, இட ஒதுக்கீட்டை இழிவான ஓர் ஏற்பாடாகத்தான் பார்க்கிறார்கள்.

இன்றுதான் என்றில்லை, இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது முதலே அது இப்படிக் கொஞ்சம் கீழ்ப் பார்வையில்தான் அணுகப்படுகிறது என்பதை நம் தாத்தா-பாட்டிகள், அப்பா-அம்மாக்கள் போன்ற முந்தைய தலைமுறையினர் இது பற்றிப் பேசும்பொழுது அறியலாம்.

ஊடகம் என்பது அரசு – தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே இருந்த காலத்தில் பொதுமக்களிடம் இப்படி ஒரு கருத்து நிலவியது பெரிய பாதிப்பை சமூக அளவில் ஏற்படுத்தவில்லை (அல்லது அப்படி ஏற்பட்டது வெளியில் தெரியவில்லை). ஆனால், சமூக வலைத்தளங்கள் கோலோச்சும் இக்காலக்கட்டத்தில் ஊடகம் என்பது ஒவ்வொரு தனி ஆளுடைய கையிலும் இருக்கிறது. தனி ஒரு மனிதர் நினைத்தால் கூடத் தன் கருத்தை உலகமெங்கும் ஒரே நேரத்தில் பார்வைக்கு முடிகிற இற்றை நாளில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையே தீர்மானிக்கக்கூடிய இட ஒதுக்கீடு போன்ற விதயங்கள் பற்றிப் பொதுமக்களிடம் தவறான புரிதல் இருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதன் கண்கூடான எடுத்துக்காட்டுதான் படேல் இனத்தினரின் கலவரம்.

சூலை மாதம் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துடையவர்களை ஒரே மாதத்தில் திரட்டி, நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவுக்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்த ஆகஸ்டிலேயே நிகழ்த்த முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சமூக வலைத்தளங்கள்.

சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக எத்தனையோ போராளிகளும் அறிஞர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய இட ஒதுக்கீட்டுச் சட்டம் பற்றி மொத்த சமூகமும் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதை இனியும் வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது; இது பற்றி இன்றைய படித்த இளைஞர்கள் எழுப்பும் கிடுக்கிப்பிடிக் கேள்விகளுக்குப் பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இனியாவது சமூக ஆர்வலர்களும், தலைவர்களும், அறிஞர் பெருமக்களும், அரசும் உணர வேண்டிய தறுவாய் இது!

சமூகத்தின் மீது அக்கறை உள்ளவன் எனும் முறையில், இட ஒதுக்கீடு பற்றிக் காலங்காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விளக்கங்களை இங்கு முன்வைக்கிறேன்.

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்