.

ஞாயிறு, மே 17, 2015

தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்!





நேற்று பார்த்தது போல் இருக்கிறது அந்தக் குருதி கொப்பளிக்கும் காட்சிகளை!

இன்றும் ஓயவில்லை அந்த மரண ஓலமும் அழுகையும்!

இன்னும் காயவில்லை ஒன்றரை லட்சம் பேரைப் பறிகொடுத்த உள்ளக் காயம்!

ஆனால் அதற்குள், இதோ, தமிழினம் அழிக்கப்பட்டு நாளையோடு முழுதாக ஆறு ஆண்டுகள் முடியப் போகின்றன! 

கடந்த (ஐந்தாமாண்டு) நினைவஞ்சலி நாளில் தமிழினப் படுகொலையைப் பின்னின்று நடத்திய காங்கிரசை வீழ்த்திய ஆறுதலுடன் நாம் மெழுகுத்திரி ஏற்றினோம். இந்த ஆண்டோ அதை முன்னின்று நிகழ்த்திய இராசபக்சவையே வீழ்த்திவிட்டு அதைக் கடைப்பிடிக்கிறோம்.

ஆக, ஈழப் பிரச்சினையில் ஒவ்வோர் ஆண்டும் ஓரளவாவது முன்னேற்றம் காண்கிறோம் என்பது ஆறுதலானது. ஆனால், இந்தப் பிரச்சினை குறித்த நம் நிலைப்பாடுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் நாம் இன்னும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை என்பதே உண்மை!

முதலில், இப்பேர்ப்பட்ட பேரழிப்புக்குப் பின் நாம் அடைந்திருக்க வேண்டிய முதன்மையான முன்னேற்றம் ஒற்றுமை!

ஒன்றில்லை, இரண்டில்லை பத்து நாடுகள் சேர்ந்து நம் இனத்தை அழித்திருக்கின்றன. பதினைந்து நாடுகள் அதற்கு ஆதரவாக நின்றிருக்கின்றன. அதாவது, நாம் வாழும் உலகின் ஒரு கணிசமான பகுதியே நம் அழிவை விரும்புகிறது! இப்பேர்ப்பட்ட நிலைமையில் நாம் எந்த அளவுக்கு ஒற்றுமைப்பட்டிருக்க வேண்டும்? எவ்வளவு உறுதியாக ஒருங்கிணைந்து, கைகோத்து நிற்க வேண்டும்? ஆனால், இப்பொழுது வரை, இந்த இனப்படுகொலை நினைவு நாளைக் கடைப்பிடிப்பதில் கூட நம்மிடையே ஒற்றுமை இல்லை! சிலர் மே 17, சிலர் மே 18, சிலர் மே 19 என ஆளுக்கொரு நாளில் அஞ்சலி செலுத்துகிறோம். கண்ணெதிரே இனத்தையே பலி கொடுத்த பின்னும் தமிழர் நம் ஒற்றுமை இவ்வளவுதான்!

முன்பை விட இப்பொழுதுதான் இன்னும் சாதியப் பிரிவினைகள் வலுப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கூடக் கையில் அவரவர் சாதிக் கட்சியை நினைவூட்டும் நிறத்திலான கயிறுகளை அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் எனத் தெரிய வரும்பொழுது நெஞ்சம் விட்டுப் போகிறது. (நன்றி: ஆனந்த விகடன் இதழ் 26.03.2015).

மக்கள்தான் இப்படி என்றால், இவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தலைவர்களோ இதற்கும் ஒரு படி மேலே போய் திராவிடமா, தமிழ் தேசியமா எனக் கருத்தியல் அடிப்படையில் தங்களுக்குள்ளேயே பிரிந்து நிற்கிறார்கள்.

உலகமே தங்களுக்கு எதிராக நிற்கும் நிலையிலும் அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை பற்றித் துளியும் கவலையில்லாமல் நாம் இன்னும் நமக்குள்ளேயே இப்படி இடையறாமல் அடித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நம்மை விட அடிமுட்டாள்கள் உலகில் வேறு யாராவது இருப்பார்களா?

செய்ய வேண்டியது என்ன? கடமை – ௧ (1)

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்