.

செவ்வாய், பிப்ரவரி 18, 2014

மூவர் தூக்குத் தண்டனைத் தள்ளுபடியும் தமிழர் கடமைகளும்!




வெற்றி!...


வெற்றி!...


வெற்றி!...


நீதியின் வெற்றி!


நேர்மையின் வெற்றி!


பொறுமையின் வெற்றி!


அறப் போராட்டத்தின் வெற்றி!


மறத் தமிழரின் வெற்றி!


முதுமையிலும் சாதிக்க


முடியும் எனக் காட்டியுள்ள


அற்புதம்மாளின் வெற்றி!


தாய் அவருக்குத் தோள் கொடுத்த


தமிழ்ப் பிள்ளைகளின் வெற்றி!


பல காலமாய்ப் போராடிய


தலைவர் வை.கோ-வின் வெற்றி!


இளந்தலைமுறையைத் தட்டியெழுப்பிய


அண்ணன் சீமானின் வெற்றி!


புதிய புயல்களாய்ப் புறப்பட்டுள்ள


இன்ன பிற தமிழ்த் தலைவர்களின் வெற்றி!


உலகெங்குமுள்ள


மனித உரிமை ஆர்வலர்களின் வெற்றி!


மரண தண்டனை எதிர்ப்பாளர்களின் வெற்றி!

எல்லோருக்கும் மேலாய்

இந்த அண்ணன்கள் விடுதலைக்காய்

உயிர் விளக்கேற்றிய

ஈகி செங்கொடியின் வெற்றி இது!


இவர்கள் குற்றமே செய்யவில்லை என்பதை


உறுதிப்படுத்த முடிந்திருந்தால்


இன்னும் களிகூர்ந்திருக்கும் இந்த மன்பதை!




ஆனாலும் இது வெற்றிதான்!


ஆறுதல் மிகத் தரும் பெற்றிதான்!


கொண்டாடுவோம்!


கொண்டாடுவோம்!


தமிழ் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி...


காங்கிரசார் செவிடுபட எக்காளம் முழங்கி...


தோழர்களை அணைத்து...


ஆனந்தக் கண்ணீர் உகுத்து...


பட்டாசுகள் வெடித்து...


தப்பட்டை அடித்து...


கொண்டாடுவோம் இன்று!


இது நம்


முதல் வெற்றி என்று!...




ஆம்...

திங்கள், பிப்ரவரி 03, 2014

இந்திய அரசின் விருதுகளை ஏற்பது பெருமையா இழிவா? - தமிழ் ஆளுமைகள், போராளிகள் பார்வைக்கு!

Tamils, Say No to Indian National Awards

விருது பெறுவதற்கு மட்டுமில்லை, வழங்குவதற்கும் தகுதி என்பது வேண்டும். ஆனால், நம் தமிழ் ஆளுமைகள் அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படுவதில்லை. யார், என்ன விருது கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.

தமிழ் இனத்தையே அழித்தொழித்த இந்திய அரசு தரும் விருதுகளை ஏற்க வேண்டாம் என எவ்வளவுதான் சொன்னாலும் யாரும் இங்கு காதில் போட்டுக் கொள்வதாக இல்லை. அந்த வரிசையில் இப்பொழுது புதிதாகச் சேர இருக்கிறார்கள், காலமெல்லாம் “தமிழ்... தமிழ்... என்று பேசிக் கொண்டிருக்கிற கலைஞானியும் கவிப்பேரரசுவும்!

பத்மபூஷண் விருது அறிவிப்பு வந்த அதே நாளேட்டில், அந்தச் செய்தியை ஒட்டியே இவர்களின் நன்றி அறிவிப்பும் வருகிறது! அதுவும், அறிவிப்பில் ஓரிடத்தில் கூட நம் இனத்தையே கொடூரமாகப் பலி வாங்கியவர்களின் கைகளால் இந்த விருது பெற இருக்கிறோமே என்கிற வருத்தம் அணுவளவும் இல்லாமல்!

ஈழத்தில் இந்தியா செய்த அட்டூழியங்கள் எதுவும் இவர்களுக்குத் தெரியாதது இல்லை. ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை கொண்ட இந்திய அரசு, மாறாக அவர்களை அழிப்பதற்குத் தன்னாலான எல்லா உதவிகளையும் செய்தது!

  • நேரடியாகவே பணமும் ராணுவத் தளவாடங்களும் வழங்கி உதவியது.
  • தரைப்படைத் தளபதியை அனுப்பிப் போர் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தது.
  • ரகசியமாக ஆயுதங்களும் அனுப்பியது.
  • இனப்படுகொலையை நிறுத்த ஐ.நா மூலமாக மேற்குலக நாடுகள் செய்த முயற்சிகளைத் தன் அரசியல் செல்வாக்கால் முறியடித்தது.
  • இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைத் தோற்கடித்து இனப்படுகொலை நிற்காமல் தொடர வழிவகுத்தது.
  • எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக, கடைசி நேரத்தில், முள்ளி வாய்க்கால் பேரழிப்புக்கு முன்பு அதைத் தடுக்க நேரடியாகவே அமெரிக்காவும் பிரிட்டனும் களமிறங்கத் தீர்மானித்திருந்த நேரத்தில் அதையும் நிறைவேற விடாமல் தடுத்து ஒரே நாளில் நாற்பதாயிரம் தமிழர்கள் மிகக் குரூரமாகச் சாக வகை செய்தது இந்தியா! (சான்று: விக்கிலீக்ஸ்).

இவ்வளவும் போதாதென்று, நடந்தது வெறும் போர் இல்லை. ஓர் இனத்தையே அழிப்பதற்காக நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று ஐ.நா விசாரணைக் குழு அறிவித்த பின்னும், இப்பொழுதும் தற்போதைய இந்திய அரசு இலங்கைக்குத்தான் ஆதரவாக நிற்கிறது! ஐ.நா விசாரணைக் குழுவின் இந்த அறிக்கை பற்றி ஐ.நா பாதுகாப்பு அவையில் விவாதித்து அதன் பேரில் முடிவெடுக்கலாம் என்று உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு முதல் ஆளாக எதிர்ப்புத் தெரிவித்தது இந்திய அரசுதான்.

Kamalhaassan & Vairamuthu
தமிழர்களுக்கு எதிராக இத்தனை உலக மகா அக்கிரமங்களையும் நிகழ்த்திய, நிகழ்த்துகிற இந்திய அரசின் கையால் தங்கள் தமிழ்சார் சாதனைகளுக்கான விருதைப் பெறுவதில் இவர்களுக்கு அப்படி என்ன பெருமை இருக்க முடியும் என எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை! சராசரி மனிதர்களை விடப் பல மடங்கு அறிவுக் கூர்மையும், திறமையும் படைத்த இவர்களுக்கு இந்த அடிப்படை முரண்பாடு கூடவா தெரியவில்லை? தாங்கள் செய்த தமிழ்ச் சேவைக்கான விருதைத் தமிழர்களையே அழித்தவர்களின் கையாலா பெறுவது என உள்ளத்தில் ஒரு சிறு வேதனை கூடவா இவர்களுக்கு எழவில்லை? என்ன வகையான மொழி உணர்வு இது?!

சிலர் கேட்கலாம், “இது தனிப்பட்ட முறையில் அவர்களின் திறமைகளைப் பாராட்டித் தரப்படும் விருதுதானே? இதற்கும் ஈழப் பிரச்சினைக்கும் ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள்? ஏன் இவை இரண்டையும் நாம் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என.

அப்படியில்லை நண்பர்களே!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்