.

செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஓரினச் சேர்க்கை அங்கீகாரமும் பெண்ணியமும் - ஒரு புதிய கோணம்!

LGBT_flag
ஓரினச்சேர்க்கையாளர் குழுமக் கொடி
முன்னேற்றம் என்பது எப்பொழுதும் படிப்படியாக ஏற்பட வேண்டும். இது தனி மனிதனுக்கு மட்டுமில்லை, சமூகத்துக்கும் பொருந்தும்!

ஓரினச் சேர்க்கை சரியா, தவறா என்பது அப்புறம். ஆனால், அதற்குச் சட்டப்படி ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்கும் அளவுக்கு நம் சமூகம் முன்னேறிவிட்டதா என்பதே என் கேள்வி.

அமெரிக்காவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஐரோப்பாவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அங்கெல்லாம் தனி மனித விடுதலை அந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது. இங்கு...?

அகநானூறு முதலான சங்க இலக்கியங்கள், பண்டைத் தமிழினம் எந்தளவுக்குப் பாலியல் நாகரிகத்துடனும் சுதந்திரத்துடனும் திகழ்ந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆனால், அப்படி வாழ்ந்த இனம் இது என இன்று சொன்னால் நம்மாலேயே நம்ப முடியாது.

ஒரு புறம், நம் மக்களில் பெரும்பாலானோருக்குப் பாலியல் அறிவே முழுமையாக இல்லை.

ஆணும் பெண்ணும் காதலிக்கவே இங்கு முழுமையான சுதந்திரம் இல்லை.

மறுபுறம், காதலுக்கும் காமத்துக்குமே இன்னும் சரிவர வேறுபாடு புரியாமல் பள்ளிப் பருவத்திலேயே பிள்ளைகள் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு ஓடுகின்றன! (எதிரெதிர் பாலினரோடுதான்!)

நம் பிள்ளைகளுக்கு நாம் பாலியல் கல்விக்கே இன்னும் ஏற்பாடு செய்யவில்லை. அவ்வளவு ஏன், ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வகுப்பறையில் சேர்த்து உட்கார வைத்துப் பாடம் கற்பிக்கும் அளவுக்குக் கூட இன்னும் நம் சமூகம் முன்னேறவில்லை. பாலியல் அறிவுடன் பிள்ளைகளை வளர்க்கும் நம் பழந்தமிழ்ச் சமூக அமைப்பும் இப்பொழுது இங்கு இல்லை.

இப்படி, பாலியல்துறையில் இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, அதை வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடிய சமூகத்தைப் பின்பற்றும் தகுதி எப்படி இருக்க முடியும்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாவா?

அதே நேரம், ‘இந்தியப் பண்பாடு எனும் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவை எதிர்ப்பவர்கள் சரியான கேடிகள்! எதற்கெடுத்தாலும், எப்பொழுது பார்த்தாலும் இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு! தெரியாமல்தான் கேட்கிறேன், ‘இந்தியப் பண்பாடு என ஒன்று இருக்கிறதா?

தமிழ்ப் பண்பாடு இருக்கிறது, தெலுங்குப் பண்பாடு இருக்கிறது, கன்னடப் பண்பாடு, மகாராட்டிரப் பண்பாடு, ஒரியப் பண்பாடு எனக் காசுமீரப் பண்பாடு வரை பல பண்பாடுகள் இங்கு இருக்கின்றன. இந்து, முசுலீம், கிறித்தவப் பண்பாடுகள் கூட இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ‘இந்தியப் பண்பாடு என ஒன்று கிடையவே கிடையாது. அப்படி ஒன்று இருப்பதாகச் சொல்வது இந்தியத் தேசிய இனங்களை ஏமாற்றும் பன்னெடுங்காலப் பச்சைப் பொய்!

பண்பாடு என்பது முன்னோர் கடைப்பிடித்த நாகரிகம். அது முழுக்க முழுக்க இனம் சார்ந்ததாகவும், மதம் சார்ந்ததாகவும் மட்டுமே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்படியிருக்க, பல மதங்களும், பல இனங்களும் வாழும் இந்நாட்டில் முழு நாட்டுக்கும் பொதுவான ஒரு பண்பாடு எப்படி இருக்க முடியும்? கேட்டால், இந்நாட்டின் பழமையான மதம் இந்து மதம்; எனவே இந்து மதப் பண்பாடே ‘இந்தியப் பண்பாடு என்பார்கள். அதுவும் பொய்! ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்பொழுது, கிறித்தவம், இசுலாமியம், பார்சி போன்ற மதம் சார்ந்த மக்கள் தவிர மற்ற எல்லாரையும் ‘இந்துக்கள் பட்டியலிலேயே சேர்த்துக் கொள்ளும்படி, ஆங்கிலேயர்களுக்குத் தவறாக வழிகாட்டினார்கள் வெள்ளையர் அரசில் செல்வாக்கு பெற்றிருந்த அன்றைய பார்ப்பனர்கள். அதனால்தான் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் என மொத்தத் திராவிட இனமும் இந்துமயமானது. மேலோட்டமாகப் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பினும், கடவுளர், அவர்களை வழிபடும் முறைகள், சடங்குகள் என இந்து மதத்துக்கும் இங்குள்ள தேசிய இனங்களின் மதங்களுக்கும் எல்லா வகைகளிலும் அடிப்படையிலேயே பற்பல வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி அண்மைக்காலமாக விழிப்புணர்வு பெருகி வருகிறது. எனவே, ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இங்கு தனித்தனி மதங்கள் இருந்திருக்கின்றன எனும்பொழுது, எல்லா இனங்களையும், எல்லா மதங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு ஓர் உருவமாக வளர்ந்து நிற்கும் இந்து மதத்தை ஒரு மதம் என்றே சொல்ல முடியாது எனும்பொழுது அதன் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்பது துளியும் உண்மையில்லாதது!

சரி, மதம் போகட்டும்; மனிதத்துக்கு வருவோம்!

செவ்வாய், டிசம்பர் 17, 2013

வை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா? – ஓர் அலசல்!

MDMK-BJP_alliance

பாரதிய ஜனதாவுடனான தலைவர் வை.கோ அவர்களின் கூட்டணியையும், தமிழருவி மணியன் முதலான தமிழர் தலைவர்களின் இன்றைய பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டையும் விமரிசிக்கும் அனைவரிடமும் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான். 

இதை விட்டால் வேறென்ன வழி இருக்கிறது? 

'எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பதுதான் இன்றும் நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது எனும்பொழுது, கூட்டணி மட்டும் புத்தர்களுடனும் காந்திகளுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆம், பா.ஜ.க-தான் சிறந்த தேர்வு எனச் சொல்லவில்லை. மற்றவையெல்லாம் அதைவிட ஆபத்தானவை என்பதுதான் விதயமே!

ஒரு புறம், முள்ளிவாய்க்கால் பேரழிவை நிகழ்த்திய காங்கிரசு; மறு புறம், முள்ளிவாய்க்கால் முற்றம் இடித்த ஜெயலலிதா; இன்னொரு புறம், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியாத இரசியா தனி ஈழத்தை எதிர்க்கிறது என்பதற்காகத் தாங்களும் தனி ஈழத்தை எதிர்க்கும் அறிவுக் கொழுந்துகளான பொதுவுடைமைத் தோழர்கள். பா.ஜ.க-வுக்குப் பதிலாக இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள் நண்பர்களே?

வெள்ளி, டிசம்பர் 06, 2013

மூவர் விடுதலையும் ஈழ விடுதலையும் - திறந்திருக்கும் புதிய வாசல்!



kutramatra moovar

மூன்று தூக்குக் கயிறுகளுள் ஒன்றில் இப்பொழுது பற்றியிருக்கிறது உண்மைத் தீ!

‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் அப்படி வாக்குமூலம் கொடுக்கவே இல்லை’ என்று 22 ஆண்டுகளுக்குப் பின் வாய் திறந்து கூறியுள்ளார், அந்த வாக்குமூலத்தைப் பெற்ற விசாரணை அலுவலர் தியாகராஜன் அவர்கள்.

‘சிவராசன் கேட்டுக்கொண்டபடி பற்றரிகளை (Batteries) வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொல்லத்தான் என்பது எனக்குத் தெரியாது’ என்றுதான் பேரறிவாளன் வாக்குமூலம் தந்ததாகவும், ஆனால் அந்த இரண்டாவது வரியைத் (எதற்காகப் பயன்படப் போகிறது என்பது தெரியாது) தான் வாக்குமூலத்தில் பதிவு செய்யவில்லை எனவும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் அவர்! இதை நீதிமன்றத்தில் சொல்லவும் தான் ஆயத்தமாக இருப்பதாகவும் பெருந்தன்மையோடு முன்வந்திருக்கிறார்!

Thiyagarajan CBI
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது உண்மையைத் தயங்காமல், அதுவும் இவ்வளவு உறுதியாக, தெளிவாக வெளியிட முன்வந்தமைக்காக, அதிலும் நீதிமன்றத்திலும் சொல்ல ஒப்புக்கொண்டமைக்காக முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.தியாகராஜன் அவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் நன்றி உரைத்தே ஆக வேண்டும்! எனினும், இன்னும் கொஞ்சம் முன்பாகவே அவர் இதை வெளியிட்டிருக்கலாம் என்பதே அனைவரின் ஆதங்கமும். சரி, இப்பொழுதாவது சொன்னாரே என ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

பெரிய சான்றுகளோ, ஐயம் திரிபற்ற உறுதிப்பாடுகளோ (Non questionable proof) இல்லாமல் எந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் இத்தனை நீதிமன்றங்களும் இவர்களுக்குத் தூக்குத் தண்டனையை வழங்கினவோ, அந்த வாக்குமூலங்களில் ஒன்றே தவறானது என்று ஆகிவிட்ட நிலையில் இனி மற்றவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களும் மறு ஆய்வுக்குரியவை என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்! இந்த மூவரின் உயிர் காக்கச் சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஐயா பழ.நெடுமாறன் முதலானோர் இனியும் தாமதிக்காமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முழுமையாகத் தொடக்கத்திலிருந்து மறு விசாரணை செய்ய வேண்டி உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்! காரணம், இவர்கள் மூவரும் இந்தக் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பது இவர்களையும் இவர்கள் குடும்பத்தினரையும் மட்டும் பாதிக்கவில்லை; தமிழ் இனத்தையே பாதிக்கிறது!

இந்தக் கொலைப் பழி விடுதலைப்புலிகள் மீது விழுந்ததால்தான் அந்த இயக்கத்தின் மீது இந்தியா தடை போட்டது.

தங்கள் நாட்டு எல்லையைத் தாண்டி அயல்நாட்டில் இப்படி ஒரு தீவிரவாதச் செயலைச் செய்ததாகக் கூறி இந்தியா போட்ட அந்தத் தடைதான், ஒன்றுமறியாத தங்கள் அப்பாவி மக்களின் பாதுகாப்புக்காகத் தனிநாடு கோரிப் போராடிய விடுதலை இயக்கம் ஒன்றைப் பன்னாட்டுத் தீவிரவாத இயக்கமாக உருவகப்படுத்தியது.

அதைத் தொடர்ந்துதான், உலகின் மற்ற நாடுகளும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது தடை போட்டு அதைப் பன்னாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவித்தன. அதன் விளைவு, 2001ஆம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின், உலகின் எல்லா ஆயுதக் குழுக்களையும் ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற அமெரிக்காவின் முடிவுக்கு விடுதலைப்புலிகள் இயக்கமும் பலியானது; அத்தோடு சேர்ந்து நம் இனமும் அழிந்தது.

ஆக, அனைத்துக்கும் மூலக் காரணம் ராஜீவ் காந்தி கொலை! அந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தவறான விசாரணை முறைகள்!

“அஃது எப்படி? பேரறிவாளன் ஒருவரின் வாக்குமூலம் தவறாகப் பதியப்பட்டதாலேயே இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற விடுதலைப்புலிகளின் பங்கு இல்லையென்றாகி விடுமா? விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இல்லையென்றுதான் ஆகிவிடுமா?” எனக் கேள்வி எழலாம்.

Liberation Tigers of Tamil Eelamஇந்த ஒன்றை மட்டும் வைத்து அப்படிச் சொல்லமுடியாதுதான். ஆனால் எப்பொழுது, வழக்கில் முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வாக்குமூலமே தவறாகப் பதியப்பட்டிருக்கிறது என்று தெரிந்துவிட்டதோ, இனி மொத்த வழக்கையுமே மறு விசாரணைக்கு உட்படுத்துவதுதான் முறை. அதுவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ள இந்த வழக்கில் இது சிறிதும் மறுக்க முடியாதது! அப்படியொரு விசாரணை மேற்கொள்ளப்படும்பொழுது திடுக்கிடும் உண்மைகள் பல வெளிவரும் எனவும், அவற்றுள், விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்பதும் ஒன்றாக இருக்கும் எனவும்தான் பலரும் நம்புகிறார்கள்! அதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

ராஜீவை விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்பதற்கான வாதங்கள்!

திங்கள், நவம்பர் 25, 2013

பிளாகர் ‘பின்பற்றுபவர்கள்’ (Blogger Follower widget) செயலி இப்பொழுது தமிழிலும்!


ரு பழைய கணக்கெடுப்பின்படி, தமிழில் மொத்தம் 9,578 பிளாகர் வலைப்பூக்கள் இருப்பதாகச் சொல்கிறார் தலைசிறந்த தமிழ் வலைப்பதிவர்களுள் ஒருவரான நீச்சல்காரன் அவர்கள். (பார்க்க: சொடுக்குக). ஆனால் நான் பார்த்த வரையில், தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிளாகர் வலைப்பூக்கள் ஆங்கிலத்தில்தான் இயங்குகின்றன. அதாவது, தளத்தில் எல்லாமே தமிழிலேயே இருந்தாலும் தளத்தின் மொழி அமைப்பு மட்டும் ‘ஆங்கிலம் என வைக்கப்பட்டிருக்கும். பதிவு எழுதப்பட்ட நாள், கருத்துகளின் எண்ணிக்கை ஆகியவை ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து இதைக் கண்டுபிடிக்கலாம். (பெரிய கண்டுபிடிப்பு!). 

தமிழில் எழுத வேண்டும் என விரும்பி முன்வந்திருக்கும் நம் பதிவுலகத் தோழர்கள் தங்கள் வலைப்பூ மொழியை மட்டும் ஆங்கிலத்தில் வைத்திருக்க முதற்பெரும் காரணம் பிளாகரின் ‘பின்பற்றுபவர்கள் செயலி (Blogger Follower widget) என அழைக்கப்படும் கூகுள் ‘நண்பர் இணைப்புச் செயலி (Google Friend Connect)!

சமூக வலைத்தளங்கள் வழியாகவும், திரட்டிகள் வாயிலாகவும் எத்தனை பேர் நம் வலைப்பூவைப் பின்தொடர்ந்தாலும் வலைப்பூவைப் பின்தொடர்வதற்கெனவே பிளாகர் வழங்கும் இந்தச் செயலி மூலம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைதான் ஒரு வலைப்பூவின் அதிகாரப்பூர்வமான நேயர் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது இன்றளவும். இதனால் இது பிளாகர் வலைப்பூக்களின் ஒரு மதிப்புக்குரிய அடையாளமாகிவிட்டது. மேலும், குறிப்பிட்ட வலைப்பூவை நண்பர்களுக்குப் பரிந்துரைத்தல், தான் தொடர்ந்து படிக்கும் மற்ற வலைப்பூக்களைப் பட்டியலிட்டுக் காட்ட இயலுதல் என மற்ற பின்தொடர்ச் செயலிகளில் இல்லாத சில வசதிகளும் இதில் இருக்கின்றன.

இப்படிப் பல வகைகளிலும் முதன்மை பெறுகிற, பிளாகர் வலைப்பூக்களின் அதிகாரப்பூர்வப் பின்தொடர்ச் செயலியான இதை, நம் வலைப்பூவின் மொழி அமைப்பு ஆங்கிலத்தில் இருந்தால்தான் வலைப்பூவில் இணைக்க முடியும் என நம்பப்படுவதுதான் மிகப் பெரும்பான்மையானோர் தங்கள் வலைப்பூ மொழியை ஆங்கிலத்தில் வைத்திருக்கக் காரணம்.

ஆனால், இந்த நம்பிக்கை தவறானது! ‘பிளாகர் பின்பற்றுபவர்கள் செயலி தமிழிலும் கிடைக்கிறது! Yes! Blogger Follower widget is available in Tamil also.

அண்மையில், ஓரிரு பிளாகர் வலைப்பூக்களில் இந்தச் செயலி தமிழில் காட்சியளித்ததைக் கண்டு வியந்தேன். (பார்க்க masusila.com). பிளாகருக்குள் தேடிப் பார்த்தேன். பெருவியப்புக்குரிய வகையில் கிடைத்தே விட்டது! இதோ இனி, எப்படி நம் வலைப்பூவில் இந்தச் செயலியைத் தமிழில் நிறுவலாம் எனப் பார்க்கலாம்.

புதன், நவம்பர் 06, 2013

இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டை நிறுத்த ஒரே வழி!... - போராளிகளின் இன்றியமையாக் கவனத்துக்கு!

Do not organise the Commenwealth conference in Srilanka the country which had done Tamils genocide!
ஈழத்தில் தமிழின அழிப்பு நடந்தது முதல் இப்பொழுது வரை எத்தனையோ போராட்டங்களை நாம் இந்தப் பிரச்சினைக்காக நடத்தியிருக்கிறோம். ஆனால், இந்த எல்லாப் போராட்டங்களையும் விட உச்சக்கட்டக் குழப்பத்துக்குப் பலியாகி இருப்பது இப்பொழுது நடைபெற்று வரும் ‘இலங்கைப் (காமன்வெல்த்) பொதுநலவாய மாநா’ட்டுக்கு எதிரான போராட்டம்தான்.

ஒரு பக்கம் ‘பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது’ எனப் போராடுகிறோம்; மறுபக்கமோ ‘இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது’ எனப் போராடுகிறோம்! அப்படியானால், மாநாடு இலங்கையில் நடந்தால் தேவலையா? போராடுபவர்களே தங்கள் முதல் கோரிக்கை நிறைவேறாது என்கிற முடிவோடுதான் போராடுகிறார்களா? என்ன குழப்பம் இது! இவை முன்னுக்குப் பின் முரணானவை அல்லவா?

இந்த இரண்டில் சரியான கோரிக்கை எது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், இந்தப் பொதுநலவாய மாநாட்டை இலங்கை ஏன் நடத்துகிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்! அதைப் புரிந்து கொண்டால் மாநாடு நடக்கவே கூடாதா அல்லது அதில் இந்தியா கலந்துகொள்ளாமல் இருந்தால் மட்டும் போதுமா என்பதைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.

Gordon Brown - Former Prime Minister of Englandஇந்த ஆண்டு மட்டுமில்லை, ஈழத்தில் நம் இனத்தையே கொன்று கூறு போட்ட ஓராண்டுக்குள்ளாகவே, அடுத்து வந்த பொதுநலவாய மாநாட்டைத் தான் நடத்திவிடப் பெருமுயற்சி மேற்கொண்டது இலங்கை. ஆனால், பொதுநலவாய நாடுகளின் அன்றைய தலைவர் என்ற முறையில் அப்பொழுதைய பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரௌன் அதைத் தடுத்து நிறுத்தினார். (பார்க்க இங்கே). “இலங்கை இந்த மாநாட்டை நடத்துமானால் அதில் கலந்துகொள்ளக் கூடாது எனப் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் வலியுறுத்துவேன்” என்ற அவருடைய அதிரடி அறிக்கை இலங்கையை மட்டுமின்றி உலக நாடுகளையே அன்று அதிர வைத்தது! ஆனால், இன்றைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அவர் போல் இல்லாதது நமக்குப் பின்னடைவே!

இப்படி, இந்த மாநாட்டை ஒருமுறையாவது நடத்திவிட இலங்கை தொடர்ந்து துடிப்பதற்குக் காரணம் என்ன?

திங்கள், அக்டோபர் 28, 2013

'கருத்துரைக் கண்காணிப்பு' (Comments Follow Up) இப்பொழுது பிளாகரிலும்!


Comments Follow Up now in Blogger also!

திவுக்கு வரும் கருத்துக்களைப் பரப்புவது, அதன் மூலம் வருகையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது ஆகியவற்றில் முகநூல் கருத்துப் பெட்டிக்கு நிகர் எதுவும் கிடையாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், பிளாகர் கருத்துப் பெட்டியில் இடப்படும் கருத்துக்களின் எண்ணிக்கைதான் பதிவின் முகப்பில் காட்டப்படுகிறது என்பதாலும், கருத்துத் திரட்டிகள் (Comment aggregators), கருத்துப் பட்டியல் செயலிகள் (Recent Comments widgets) ஆகியவை கூட பிளாகர் கருத்துப் பெட்டியில் இடப்படும் கருத்துக்களைத்தான் திரட்டுகின்றன என்பதாலும் பிளாகர் கருத்துப் பெட்டியும் தவிர்க்க முடியாத முதன்மையைப் பெறுகிறது. அப்படிப்பட்ட பிளாகர் கருத்துப் பெட்டியில் ஒரு புதிய மேம்பாட்டைச் செய்திருக்கிறது கூகுள்.

சில இணையத்தளங்களில் கருத்துரை இடும்பொழுது, நம் கருத்து வெளியிடப்படுவதை நாம் அறியவும், மேற்கொண்டு யாராவது அந்தப் பதிவுக்குக் கருத்து தெரிவித்தால் அதை நாம் தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். கீழ்க்காணும் படத்தில் அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டிருப்பது போல.  


Comments Follow Up in other sites
வேர்டுபிரசு வலைப்பூக்களில் கூட இந்த வசதி உண்டு. ஆனால், பிளாகரில் இத்தனை காலமாக இஃது இல்லாமல் இருந்தது. பிளாகர் வலைப்பூ ஒன்றில் நாம் ஏதேனும் கருத்து தெரிவித்தால், நம் கருத்து வெளியிடப்பட்டதா இல்லையா, மற்றவர்கள் –குறிப்பாகப் பதிவை எழுதியவர்- நம் கருத்துக்கு என்ன பதிலளித்தார்கள், குறிப்பிட்ட பதிவு பற்றி மற்றவர்கள் கருத்து என்ன என்பவற்றையெல்லாம் அறிய அந்தப் பக்கத்தை நூற்குறியிட்டுக் கொண்டு அவ்வப்பொழுது சென்று பார்த்து வர வேண்டியிருந்தது.

எத்தனையோ பக்கங்கள் படிப்போம்; எவ்வளவோ கருத்துக்கள் இடுவோம். ஒவ்வொன்றையும் இப்படி நேரில் சென்று கண்காணிப்பது முடியாது. அதனால், பிளாகர் வலைப்பூக்களில் நாம் இடும் பல கருத்துக்கள், குறைந்தது, நம்மாலேயே கூடக் கவனிக்கப்படாமல் போய்க் கொண்டிருந்தன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் இதோ, ‘கருத்துரைக் கண்காணிப்பு’ (Comments Follow Up/ Notify me of follow-up comments via email) வசதி இப்பொழுது பிளாகரிலும்!*

தனது 13-ஆம் பிறந்தநாளை ஒட்டித் தனது சேவைகளையெல்லாம் கூகுள் மேம்படுத்தி வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். அந்த வரிசையில் இப்பொழுது இந்தப் புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது கூகுள்.

இனி, பிளாகர் வலைப்பூக்களில் கருத்துரை இட்டு அனுப்பியதும் பாருங்கள்! கருத்துப் பெட்டியின் அடிப் பக்கம் ஒரு சிறு கட்டம் வரும். (பார்க்க: கீழே உள்ள படம்).

செவ்வாய், அக்டோபர் 15, 2013

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும்!


Chennai people

மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’!

கலைவாணர் என்.எசு.கே முதல் சந்தானம் வரை தமிழ்த் திரைப்படங்களில் காலம் காலமாக அனைவராலும் நையாண்டிப் பொருளாக்கப்படுவதும் சென்னைத் தமிழ்தான். தனிப்பட்ட முறையில், தமிழர்கள் அனைவருக்குமே அடுத்தவர்களின் வட்டார வழக்கை நக்கலடிக்கும் வழக்கம் இருந்தாலும், பொதுவெளியில் அனைவராலும் கிண்டலுக்குள்ளாக்கப்படுவது சென்னைத் தமிழ்தான்.

பொதுவாக, வட்டார வழக்கு என்பதே மொழியின் அழிவுக்கான காரணிதான். தாய் வாழையைச் சுற்றி வளரும் கன்றுகளைப் போன்றவை அவை. ஏனெனில், வட்டார வழக்கு (Colloquial) புழக்கத்தில் நிலைபட நிலைபட நாளடைவில் அது தனிமொழியாக (Dialect) மாறிவிடும். அதனால், எந்த மொழியிலிருந்து அந்த வட்டார வழக்கு தனிமொழியாகக் கிளர்ந்ததோ அந்தத் தாய்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். அப்படி அந்த மொழியின் எல்லா வட்டார வழக்குகளும் தனிமொழியாக மாறினால் கடைசியில் தாய்மொழியே அழிந்து போகும். இதை நான் மட்டும் சொல்லவில்லை, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நடுவம் (UNESCO) மொழிகள் அழிவதற்கான காரணிகளின் பட்டியலில் முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இதைக் குறிப்பிட்டுள்ளது. பார்க்க: அழியப்போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?! – ‘கூடல்’ தளத்தின் கட்டுரை.

இப்படி, வட்டார வழக்கு என்பதே தாய்மொழியை அழிக்கப் பிறந்ததுதான் எனும்பொழுது அவற்றுள் ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என நினைப்பது எப்பேர்ப்பட்ட மடத்தனம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்!

அப்படியானால், வட்டார வழக்குகளுக்கென எந்தச் சிறப்புமே இல்லையா எனக் கேட்டால், இருக்கிறது. அதுதான் அவற்றின் ‘சொற்களஞ்சியம்’ (Vocabulary). பொதுத் தமிழில் கூட இல்லாத அரிய, பழம்பெரும் சொற்கள் பல இன்றும் வட்டார வழக்குகளில் உயிர்ப்போடு விளங்குகின்றன. வட்டார வழக்குகளுக்கு இருக்கும் ஒரே பெருமை இதுதான். இந்தப் பெருமை சென்னைத் தமிழுக்கும் உண்டு. மற்ற வட்டார வழக்குகளிலோ பொதுத் தமிழிலோ தென்படாத பல பழம்பெரும் அருந்தமிழ்ச் சொற்கள் சென்னைத் தமிழில் உள்ளன. அவற்றின் ஒரு சிறு பட்டியல், விளக்கத்துடன் இங்கே: 

செவ்வாய், அக்டோபர் 01, 2013

சிறுவர் இலக்கியமும் சிறுவர்களின் எதிர்காலமும் - பெற்றோர்களின் கனிவான பார்வைக்கு!

Children and Stories


சிறுவர் இலக்கியம் பற்றிய எனது முந்தைய பதிவைத் திரளாக வந்து படித்து, பகிர்ந்து ஆதரவளித்த அன்பார்ந்தோர் அனைவருக்குமான நன்றிகளுடன் இந்தப் பதிவைத் தொடங்குகிறேன்! 

அந்தப் பதிவில், சிறுவர் இலக்கியத்தை மீட்டெடுப்பது தமிழ்மொழி அழியாமலிருக்க எந்தளவுக்கு இன்றியமையாதது எனப் பார்த்தோம். இம்முறை, குழந்தைகளின் வளர்ச்சியில் சிறுவர் இலக்கியம் எந்தளவுக்குத் தலையாய பங்காற்றுகிறது என்பதைப் பார்க்கலாமா?

வீட்டில் பிள்ளைகளுக்குக் கதைப் பொத்தகம்/சிறுவர் இதழ் வாங்கிக் கொடுக்கும்படிச் சொன்னால் உடனே பெற்றோர்கள் சொல்பவை,

“உக்கும்! இருக்குற பாடப் புத்தகத்தையே படிக்கக் காணோம்.”

“பாடப் புத்தகத்தைப் படிக்கவே நேரம் சரியா இருக்கு.”

“இருவத்திநாலு மணி நேரமும் டி.வி பாக்கறதுக்கே நேரம் போதல. அதை விட்டா வீடியோ கேம். இது ரெண்டையும் தூக்கிப் போட்டுட்டு, அமைதியா உக்காந்து அதுவாவது கதைப் புத்தகம் படிக்கிறதாவது.”

இப்படி ஏகப்பட்ட சலிப்புகள், கேள்விகள். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பதிலளிப்பதை விட, சிறுவர்களின் வளர்ச்சியில் படிக்கும் பழக்கம், குறிப்பாகச் சிறுவர் இலக்கியம் எந்த அளவுக்கு முதன்மைப் பங்கு வகிக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டினாலே பெற்றோர்கள் இதன் தேவையைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

மனித வளர்ச்சி புற வளர்ச்சி, அக வளர்ச்சி என இரு வகைப்படுகிறது. அவற்றுள் புற வளர்ச்சி பற்றி நமக்கே தெரியும், உடல் வளர்ச்சி. அடுத்ததான அக வளர்ச்சி மூன்று வகைப்படுகிறது. அவை,

  • பண்பு வளர்ச்சி (Characteristic Growth).
  • உளவியல் வளர்ச்சி (Mental Growth/Maturity).
  • அறிவு வளர்ச்சி (Intelligence Growth).

இந்த மூன்று வளர்ச்சிகளுக்கும் சிறுவர் இலக்கியம் எப்படி உதவுகிறது என்பதைத்தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

நாடாளலாமா நம் நாயகர்கள்? – தமிழ் நடிகர்களின் அரசியல் தகுதி பற்றி விரிவான அலசல்!


The Real Hero!

நடிகர்கள் நாடாளலாமா, அரிதாரம் பூசுபவர்கள் அரசியலுக்கு வரலாமா என்பவையெல்லாம் உலகின் வேறெந்த மக்களாட்சி நாட்டிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குக் கேடு கெட்ட கேள்விகள்! மக்களாட்சி நாடு ஒன்றில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; அல்லது, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை அளிக்கும் நாடுதான் மக்களாட்சி நாடாகும்! இதில், நடிகர்கள் வரலாமா, நாட்டுப்புறக் கலைஞர்கள் வரலாமா, பெட்டிக் கடைக்காரர்கள் வரலாமா, பிரம்புக் கூடை பின்னுபவர்கள் வரலாமா எனவெல்லாம் தனித் தனியாகக் கேள்வி எழுப்ப இடமேயில்லை.

அதே நேரம், திரைப்படத்தில் நடிக்க வருவதையே ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாகக் கருதும் மடத்தனமும் உலகின் வேறெந்த நாட்டிலும் இருக்க முடியாது என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்!

திரைப்படம், அரசியல் இரண்டும் இரண்டு வெவ்வேறு துறைகள். இதற்கான தகுதிகள் வேறு, அதற்கான தகுதிகள் வேறு. ஆனால், இவை இரண்டையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்வதில் நம் அரசியலாளர்களும், நடிகர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களே இல்லை. விளம்பரம், புகழ், செல்வாக்கு இம்மூன்றையும் - ஆம், இந்த மூன்றே மூன்றையும் – உடனே தருபவை என்பதைத் தவிர இந்த இரண்டு துறைகளுக்கும் இடையில் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. அப்படியிருக்க, எந்தத் தகுதியின் அடிப்படையில் நம் நடிகர்கள் அரசாட்சிக் கனவு காண்கிறார்கள் என்பது புரியவில்லை. ஆட்சிக்கு வருவதற்கென ஒரு தகுதி வேண்டாமா? திரைப்படத்தில் நடிப்பதற்கு மட்டும் நீங்கள் என்னென்ன வகைகளில், எப்படியெல்லாம் பயிற்சி எடுத்து உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்கிறீர்கள்? தனியாகப் பயிற்சியாளர்களை வைத்துச் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள், உடற்பயிற்சி கற்றுக் கொள்கிறீர்கள், ஆடக் கற்றுக் கொள்கிறீர்கள், அன்றாட உணவுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது வரை நுணுக்கமாகக் கேட்டு அறிந்துகொண்டு கடைப்பிடிக்கிறீர்கள்! ஆனால், அரசியலுக்கு வருவதற்கு இப்படி என்ன பயிற்சி எடுத்தீர்கள்? வில்லனைக் குத்துவதற்கு மடக்குவது போல் ஐந்து விரல்களையல்ல, ஒரே ஒரு விரலை மடக்குங்கள் பார்க்கலாம் இந்தக் கேள்விக்கு!

பத்தாயிரம் ஆண்டுகால வரலாறும் பத்துக் கோடி மக்களும் கொண்ட தேசிய இனம் ஒன்றை ஆள, அதற்கான பன்னாட்டுப் பிரதிநிதியாக அமர ஆடவும், பாடவும், நடிக்கவும், பேசவும் தெரிந்தால் போதுமா? வேறெந்தத் தகுதியும் வேண்டாமா? சிந்தித்துப் பாருங்கள்!

எம்.ஜி.ஆர் வரவில்லையா என்றால், அவர் என்ன சும்மாவா வந்தார்? தகுதிகளை வளர்த்துக்கொண்டு வந்தார். தன் திருமண மண்டபத்தை இடிக்கப் பார்க்கிறார்கள் என்பதற்காகவோ, தன் திரைச் செல்வாக்குக்கும் முதல்வரின் அரசியல் செல்வாக்குக்கும் இடையிலான உரசல் காரணமாகவோ (ரஜினி), தன் படத்தை வெளிவர விடாமல் தடுத்ததற்காகக் கோபப்பட்டோ ஓர் இரவில் முடிவெடுத்து அவர் அரசியலுக்கு வரவில்லை. கருணாநிதி தன்னை முதுகில் குத்தி, கட்சியிலிருந்து நீக்கித் தனிக் கட்சி தொடங்க வேண்டி வந்ததற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே அவர் அரசியலில் இருந்தார். நடிகனாக ஓரளவு நிலைபெற்றிருந்த புதிதிலேயே தி.மு.க-வில் சேர்ந்தார். திரையுலகில் தனக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கு முழுவதையும் திராவிடக் கொள்கைகளை, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பவே பயன்படுத்தினார். அண்ணாவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்தபொழுது கூட அவர் தலைமைப் பதவிக்குத் தான் போட்டியிடாமல் கருணாநிதியைத்தான் அந்த அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தார்!

Black M.G.R?இப்படி, ஆண்டுக்கணக்கில் அரசியல் அனுபவம், நேர்மையான அரசியல் தலைவர்களுடனான தொடர்பினால் விளைந்த அரசியல் - சமூகத் தெளிவு, பொதுமேடைகளில் பல முறை மக்களை நேரடியாகச் சந்தித்ததால் உண்டான பொதுக் கருத்தை அறியும் திறன், மக்கள் – சமூக – இனப் பிரச்சினைகள் பற்றிய புரிதல், தலைவர் பதவியை விரும்பாத அரசியல் பக்குவம், பொதுநல நோக்கு முதலான பல தகுதிகள் கொண்ட அவர் எங்கே? அடுத்த எம்.ஜி.ஆர் ஆகக் கனவு காணும் நம் இன்றைய நடிகர்கள் எங்கே? இவற்றுள் எந்தத் தகுதி இவர்களுக்கு இருக்கிறது?
இவற்றையெல்லாம் வளர்த்துக் கொள்ள இவர்கள் என்ன அக்கறை காட்டுகிறார்கள்? இப்படி எந்த ஒரு தகுதியை இவர்கள் இதுவரை வெளிப்படுத்தினார்கள்? தனக்கிருந்த அரசியல் தகுதிகளுக்குண்டான இடத்தை அடையத் தன் திரையுலகப் புகழைப் பயன்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆருக்கும், திரைப்படத்தால் கிடைத்த விளம்பரத்தை மட்டுமே தகுதியாகக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க விரும்பும் இவர்களுக்கும் வேறுபாடு இல்லையா?

உடனே, இப்பொழுது பதவியில் இருப்பவர்களுக்கும், இதுவரை அந்தப் பதவியில் இருந்தவர்களுக்கும் மட்டும் எல்லாத் தகுதிகளும் இருக்கின்றனவா எனக் கேட்கலாம். இல்லைதான்! அதற்காகத்தானே மாற்று (Replacement) தேடுகிறோம்? அடுத்து வருபவர்களும் அவர்களைப் போலவே தகுதியில்லாதவர்களாக இருப்பதா? சிந்தியுங்கள் மக்களே! 

“தகுதி... தகுதி... தகுதி! அப்படி என்னதான் தகுதி வேண்டும் என்கிறாய்” எனக் கேட்கிறீர்களா? சரி! தமிழர்களின் தலைவராக, தமிழ்நாட்டு முதல்வராக வருவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன? நம் நடிகர்களுக்கு அந்தத் தகுதிகள் இருக்கின்றனவா? மேலோட்டமாக ஒரு கண்ணோட்டம் விடலாம் வாருங்கள்!

திங்கள், செப்டம்பர் 09, 2013

புலிகள் போர்க்குற்றவாளிகளா? - விளக்கமும், தமிழினத் தலைவர்களுக்கொரு விண்ணப்பமும்


Navaneetham Pillai

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது காலம் காலமாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுத்தான் வருகின்றன. ஆனால், அவை அனைத்துக்கும் உச்சக்கட்டம், நடந்த இனப்படுகொலையின்பொழுது விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில், அதுவும் தமிழர்களுக்கு எதிராக ஈடுபட்டதாகச் சொல்வது! பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் நலனுக்காக ஐ.நா சார்பில் இலங்கைக்கு வந்திருக்கும் நவநீதம் பிள்ளை இப்பொழுது மீண்டும் இந்த அருவெறுப்பான குற்றச்சாட்டைப் பற்றிப் பேசப் போக, தற்பொழுது மீண்டும் இது உலக சமுதாயத்தின் விவாதப் பொருளாகியிருக்கிறது!

வியாழன், ஆகஸ்ட் 29, 2013

முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும்!

'Like' Button problem


தொழில்நுட்பப் பதிவு எழுதுவதற்கு நான் ஒன்றும் பெரிய பிரபு கிருஷ்ணாவோ, அப்துல் பாசித்தோ, பொன்மலரோ கிடையாது. ஆனாலும், தமிழ்ப் பற்றாளன் எனும் முறையில் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட வேண்டிய தமிழ் சார்ந்த மாறுதல்களை எடுத்துச் சொல்ல எனக்குள்ள உரிமையால் இதை எழுதுகிறேன்.

நீங்கள் முகநூலைத் தமிழில் பயன்படுத்துபவரா? அல்லது, நீங்கள் வலைத்தளம்/வலைப்பூ நடத்துபவரா? அப்படியானால், குறிப்பாக உங்கள் கவனத்துக்காகத்தான் இந்தப் பதிவு! கனிவு கூர்ந்து முழுக்கப் படியுங்கள்!

அண்மையில், முகநூலின் ‘விருப்பம்’ பொத்தானில் ஏற்பட்டுள்ள ஒரு மாறுதலைத் தமிழில் முகநூல் பயன்படுத்தும் அனைவருமே பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முகநூல் தமிழ்ப் பயனர்களுக்கு இத்தனை நாட்களாக ‘விருப்பம்’ என்று காட்சியளித்து வந்த முகநூல் பொத்தான், கடந்த சூலை 24ஆம் நாள் முதல் ‘பிடித்திருக்கிறது’ எனக் காட்சியளிக்கிறது. இதனால் முகநூல் பொத்தான்கள் அனைத்திலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது!

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

நமக்கு விடுதலைக் கொண்டாட்டம் ஒரு கேடா?

தலைப்பைப் பார்த்துவிட்டு “என்னடா இவன், இப்படிக் கேட்கிறான்!” எனத் திகைக்காதீர்கள்! சுதந்திரத் திருநாள் என்பது பிறந்தநாளைப் போன்றது இல்லை, குறிப்பிட்ட மனிதர் இருந்தாலும், மறைந்தாலும் கொண்டாடுவதற்கு. அது மணநாளைப் போன்றது. குறிப்பிட்ட கணவரும் மனைவியும் சேர்ந்து வாழும் வரைதான் அந்த மணநாளைக் கொண்டாட முடியும். இருவரும் உறவு கசந்து பிரிந்துவிட்டால், அதன் பிறகு அந்த மணநாளை யாரும் கொண்டாட முடியாது; அப்படிக் கொண்டாடினால் அதை விடப் பித்துக்குளித்தனம் எதுவும் இருக்க முடியாது!

அதே போலத்தான், சுதந்திர நாளைக் கொண்டாடுவது என்றால், நீங்கள் கொண்டாடும்பொழுது அந்த சுதந்திரம் உங்களிடம் இருக்க வேண்டும்! ஆனால், தமிழர்கள் உண்மையிலேயே சுதந்திரக் குடிமக்களா?


‘பூவரசன்’ எனும் ஒரு (மொக்கை) படத்தில், கவுண்டமணியிடம் செந்தில் கேட்பார், “என்ன! இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சிடுச்சா?! அப்படின்னா, அந்த சுதந்திரம் இப்ப யாருகிட்டண்ணே இருக்கு?” என்று. அதற்குக் கவுண்டமணி, அப்பொழுது தெருவில் எடுத்துச் செல்லப்படும் பிணத்தைக் காட்டி, “அதோ மல்லாக்கப் போறானே? அவன்கிட்ட போய்க் கேளு!” என்பார்.

அந்தப் படம் வந்தபொழுது அப்படி இருந்ததோ இல்லையோ, ஆனால் இப்பொழுது, இந்தியாவில் சுதந்திரத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. செத்தவன் கையில் கொடுக்கப்பட்ட வெற்றிலை பாக்கு போலப் பயனில்லாமல்!

விளையாட்டுக்கோ வெறுப்பிலோ சொல்லவில்லை. சிந்தித்துப் பாருங்கள்! சுதந்திரக் குடிமக்களுக்கான எந்த உரிமையாவது, வசதியாவது இங்கு நமக்கு இருக்கிறதா?

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

முதல்வர் மறந்த வாக்குறுதி - மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு!


Jayalalitha's Election Report


தமிழ்நாட்டு மீனவர்கள் 65 பேரை இலங்கை அரசு கூண்டோடு பிடித்துச் சென்று மூன்று நாட்கள் கூட முழுமையாக முடியாத நிலையில், அடுத்ததாக ‘இந்திய அரசின் கடலோரக் காவல்படையே’ நேரடியாக வந்து காரைக்கால் மீனவத் தமிழர்களை நடுக்கடலில் வைத்துத் தாக்கியிருக்கிறது!

இதை அறிந்ததும், “இத்தனை நாட்களாக, இலங்கைக் கடற்படைதான் மீனவர்களைத் தாக்கியது. இப்பொழுது, இந்தியக் கடலோரக் காவல்படையும் அதையே செய்கிறதென்றால்... தவறு மீனவர்கள் பக்கம்தான் இருக்கும் போலிருக்கிறதே” எனக் கருத்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள், விவரம் புரியாத அப்பாவிகள் சிலர்!

தெரியாமல்தான் கேட்கிறேன், மீனவர்கள் என்பவர்கள் யார்? அவர்களும் நம்மைப் போல இதே நாட்டில், நாம் வாழும் இதே அரசியல், சமூகச் சூழலில் வாழ்பவர்கள்தானே? காவல்துறை அலுவலர் கோபத்தோடு ஓர் அதட்டல் போட்டாலே தொடை உதறத் தொடங்கிவிடுகிற நம்மைப் போன்ற சராசரித் தமிழ்க் குடிமக்கள்தானே அவர்களும்? கடலோரக் காவல்படையினர், அதுவும் துப்பாக்கிகளோடு வரும்பொழுது, உண்மையிலேயே தங்கள் பக்கம் தவறு இருந்திருந்தால் மீனவர்கள் உடனே அஞ்சிப் பின்வாங்கத் தொடங்கியிருக்க மாட்டார்களா? சிந்தித்துப் பாருங்கள்!

உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பது உங்களுக்குத் தெரிய வந்ததா?

செவ்வாய், ஜூலை 30, 2013

இழிவானதா இனப்பற்று?

Senkodi - Identification of Ethnicity

தே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது இனப்பற்று’! ஆனால், இன்று இனப்பற்று எனும் சொல்லைக் கூட யாரும் பயன்படுத்துவதில்லை,இன உணர்வுஎன்றுதான் குறிப்பிடுகிறோம். மேடையில் மார் தட்டுபவர்கள் கூட “‘இன உணர்வுஎன் இரத்தத்திலேயே ஊறியதுஎன்றுதான் முழங்குகிறார்கள்! அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று!

என்னதான், தமிழ்நாட்டு இளைஞர் படை வீறு கொண்டு எழுந்து உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தனி ஈழத்துக்குப் போராட்டம் நடத்தினாலும்,

திங்கள், ஜூலை 22, 2013

தமிழ்த்தாயின் தூவல் உடைந்துவிட்டது! – கவிஞர்.வாலிக்கு ஒரு கண்ணீர்க் கவிதாஞ்சலி



Kavingyar.Vaali

இயைபின் கொற்றவனே! 
தன்னிகர் அற்றவனே! 
உனைப்போல் எழுத இங்கு 
ஏது மற்றவனே! 
நீ இன்றித் தமிழன் இனி 
ஏதுமற்றவனே!

உனக்கு இரங்கல் பா எழுதவா 
வலைப்பூ தொடங்கினேன் 
என்று 
எனக்குள்ளாக அழுது - மன 
மூலையில் முடங்கினேன்! 
ஆனால் 
நடமாடிய தமிழே! 
உனக்கே இரங்கல் பா 
எழுதாததற்கு 
நான் கற்ற தமிழ் 
எனக்கெதற்கு?

சிலப்பதிகாரம், 
மணிமேகலை... 
என 
புதுக்கவிதையால் நீ 
புதுப்பிக்க வேண்டிய 
பழந்தமிழ்க் கருவூலங்கள் 
இன்னும் எவ்வளவோ 
இருக்க 
அதற்குள் என்ன அவசரம் 
இறக்க? 
எப்படி மனம் வந்தது 
தமிழுலகைத் 
துறக்க? 
இனி எங்கு போவோம் 
அப்படியொரு தமிழைச் 
சுவைக்க?!

கருணாநிதியுடன் ஒரு கையைக் 
குலுக்கிக் கொண்டே 
பார்வதியம்மாளைத் திருப்பியனுப்பியதைக் 
கண்டித்து 
மறுகையால் 
பாட்டெழுதிய 
தமிழ்ப் பொற்செண்டே! 
நீயன்றோ 
உண்மைக் கவி! 
உனையிழந்து 
இனி என் செய்யும் 
தமிழ்ப் பெரும் புவி?!

விருப்ப மொழியாய்த் 
தமிழ் படிக்கும் 
காலத்தில் 
அதை 
விருப்பு மொழியாய் 
ஆக்கியது 
உன் தமிழ்! 
இனி எங்களுக்கு 
எங்கு கிடைக்கும் அந்தச் 
செந்தமிழ்?!

‘முக்காலா முக்காபுலா’ 
‘கலாசலா கலசலா’ 
என்றெல்லாம் 
இளைஞர்களுக்கு வைப்பாய் 
சொக்குப்பொடி மருந்து 
பின்னர் 
‘முன்பே வா! அன்பே வா’ 
‘நங்காய்! நிலாவின் தங்காய்!’ – என்று 
அவர்களுக்குப் படைப்பாய் 
இலக்கிய விருந்து!

இப்படித் 
திட்டமிட்டுத் திட்டமிட்டு
இலக்கிய ரசனை வளர்த்தது 
வாலி பாணி! 
உனக்குப் பின்னே 
இந்தச் 
சேவை செய்ய 
யாரும் 
பிறக்கும் முன்னே 
போகலாமா 
வாலிபா நீ?

தீர்ந்து விட்டதா 
இதற்குள் 
உன் மை? 
சொல்லியிருந்தால் 
எங்கள் உதிரத்தைக் கொடுத்திருப்போம்! 
இது உண்மை!

வந்திருக்கலாம் 
உன் உடலுக்கு 
முதுமை! 
ஆனால் 
உன் எழுத்திலே 
தீரவில்லையே இன்னும் அந்த 
இளமை! 
அதற்குள் நீ 
ஓய்வெடுத்துக் கொண்டதென்ன 
புதுமை!

பாடியிருக்கலாமே 
காலனை நோக்கி 
அறம்? 
காட்டியிருப்பானே 
அவன் உனக்குப் 
புறம்!

மறந்ததேன்? – எங்களைப் 
பிரிந்ததேன்?

நீ போனாலும் 
உன் படைப்புகள் இருப்பதாக 
ஆறுதல் கொள்வதா? 
அதைப்போல் வேறு 
மடத்தனம் உள்ளதா?

நீ எழுதியவையெல்லாம் அமுதம்தான் 
மறுக்கவில்லை; 
ஆனால் 
சுரபியே போய்விட்டதே 
அதுதானே 
பொறுக்கவில்லை!

பார்வதியை வேண்டினாய் 
கவிதையில் ஒருமுறை 
“திருஞான சம்பந்தன் 
அருந்தியது போக 
மிச்சத்தை எனக்குக் கொடு” 
என்று! 
நினைவை அது 
தீண்டுகிறது இன்று

சம்பந்தன் அருந்தியது 
உமையவள் 
கிண்ணத்தில் தந்த ஞானப்பால்; 
ஆனால் 
எங்கள் வாலிநீ பருகியதோ 
தமிழ்த்தாய் 
மடியமர்த்தி ஊட்டிய சொந்தப்பால்! 
அப்பேர்ப்பட்ட உனக்கும் 
இறப்பு என ஒன்றிருக்கும் – என 
நினைக்கவில்லை இதுவரைக்கும்!

ஆனால் 
அது நடந்தே விட்டது! 
உயிருள்ள தமிழ்ப் பேரகராதி எரிந்தே விட்டது! 
கடைசியில் 
தமிழ்த்தாயின் தூவல் உடைந்தே விட்டது!


*********

பெருங்கவிஞர்.வாலி அவர்கள் பற்றி முழுமையாக அறிய: http://ta.wikipedia.org/wiki/வாலி
வாலி அவர்களின் பாடல்களைப் படித்து மகிழ: http://www.tamilpaa.net/tamil-lyricist-list/vaali 

படம்: நன்றி http://www.moviegallary.in/ 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்